Fourth Annual General Body Meeting

Fourth Annual General Body Meeting

                                                                                         ஆக்கம் : ராஜி ஆதர்ஷ்

RTPTCA யின் 4 வது வருடாந்திர அனைத்து  உறுப்பினர்கள் பொது கூட்டம்,2-பிப்ரவரி,2020  அன்று  St.Andrew’s Church,Fellowship Hall-ல் சிறப்பாக நடைப்பெற்றது. சங்க உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

திருமதி தீபா அவர்கள்  தெய்வீக குரலில் இறைவணக்கம் பாட, நிகழ்ச்சி தொடங்கியது. செயலாளர் திரு ஸ்டான்லி அவர்கள், அனைவரையும் கவரும் விதத்தில் நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பு கலந்து வரவேற்புரை ஆற்றி, அனைவரின் கைதட்டல்களை பெற்றார்.

திருமதி வித்யா அவர்களின் தலைமையில் அற்புதமாக தயாரான 2019 ஆம் வருட ஆண்டு மலரை அவர் வெளியிட, செயலாளர் திரு ஸ்டான்லி அவர்கள் அதை பெற்றுக்கொண்டார். இந்த ஆண்டு மலர், 2019 ஆம் வருட நிகழ்வுகளின் தொகுப்பாக சங்க உறுப்பினர்களின் கவிதை, கட்டுரை, கலைகளின் கலவையாய் அனைவரின் திறமைகளை பிரதிபலித்தது. இது மிகப்பெரும் கூட்டு முயற்சி, திருமதி வித்யா அவர்களின் தலைமையில் அற்புதமாக தயாரான புத்தகம் .

துணைத் தலைவர் திரு அந்தோணி அவர்கள் 2019 ஆம் ஆண்டு நடந்த அனைத்து நிகழ்வுகளையும் ஜனவரி முதல் டிசம்பர் வரை நம் கண்முன் வந்து நிறுத்தினார். பின்னர் எந்த ஒரு நிர்வாகத்திற்கும் மிகவும் முக்கியமான நிதி அறிக்கையை திரு ஜோசப் அவர்கள் மிக தெளிவாக அனைவர்க்கும் புரியும் வகையில் செம்மையாக விளக்கினார். இம்முறை அனைவருக்கும் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது. இது நிர்வாகம் உறுப்பினர்களிடம் எவ்வளவு வெளிப்படையாக இருக்கிறது என்பதை மிக தெளிவாய் காட்டுகிறது.

அடுத்தபடியாக, 2020 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டிருந்த திருமதி சுஜா, திருமதி அனிதா மற்றும் திருமதி ராஜி ஆகியோரை தலைவர் திரு சவேரியார் அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். திரு லாசர் அவர்கள் நிர்வாக விதிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்கள் என்ன என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். துணைத் தலைவர் திரு அந்தோணி அவர்கள் 2020 ஆண்டின் முன்னோட்டம், எப்படி முன்னோக்கி செயல்பட உள்ளோம் என உரையாற்றினார்.

திரு லாசர், திரு. கிங்ஸ்லி  மற்றும் திரு ஸ்டான்லி அவர்கள் நிர்வாக இயக்குனர்கள் குழுவில் இருந்து விலகி மற்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கொடுத்தனர் அவர்களை மற்றும் அவர்களின் பங்களிப்புகளை கௌரவப்படுத்தும் விதமாக அவர்கள் இருவருக்கும் தலைவர் திரு சவேரியார் அவர்கள் மலர்க்கொத்து மற்றும் நற்சான்று மடல்களை வழங்கி பெருமை படுத்தினார்.

அதன்பின் 2020 ஆம் ஆண்டிற்கான தன்னார்வ உறுப்பினர்களுக்கான தேவை தெரிவிக்கப்பட்டன. கேள்வி பதில் கூட்டத்தொடர்வு சிறப்பாக நடைபெற நிகழ்ச்சி நிறைவிற்கு வந்தது. துணைத் தலைவர் திரு அந்தோணி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். நிகழிச்சி இனிதே நிறைவுற அனைவரும் கொண்டுவரப்பட்ட தேனீர், சிற்றுண்டி அருந்தியபின் நிகழிச்சி அறையை துப்பரவு செய்து விடைபெற்றனர்

இறைவனின் அருளால் சிறப்பாக நம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் இது போன்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும் உங்கள் பங்கேற்பும், ஆதரவும் மிக அவசியம்.